Total Pageviews

Thursday, September 5, 2019

வ உ சி பிறந்தநாள் வாழ்த்துரை

"உனக்கேன் இந்த அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள், நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக 
பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர், அதில் பொதுநலமும் கலந்து இருக்கிறது" என்ற பராசக்தி திரைப்பட வசனம் என்றும் நம் நெஞ்சில் நீங்கா நினைவில் இருப்பவை.

தனிமனிதன் தன் வாழ்வில் நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவங்களால் நேரடியாக பாதிக்கும் படும் போது அந்தந்த மனிதர்கள் நேரடியாகவோ மறைமுகமாவோ சமுதாயதிற்காக போராட ஆரம்பிப்பார்கள். அவ்வாறு  சமுகநீதிக்காக குரல் எழுப்பும்போது அவர்களது குரல் வரலாறு தோறும் கேட்டுக்கொண்டு இருக்கும்.

உதாரணமாக மகாத்மா காந்தி தென்னாபிரிக்கவில் மேற்படிப்பு பயில்கையில் நிற வேற்றுமை காரணமாக பல இன்னல்களுக்கு ஆளானார். அதுவே அவர் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட உந்துதலாக இருந்தது. பின்னாட்களில் அவர் நாம் தாய் திருநாட்டின் தந்தையாக கொண்டாட பெற்றார்.

பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரும் ஒரு சமயம் காசியில்  பசி வேதனையில் அலையும் நேரத்தில் ஒரு சத்திரத்தில் சாப்பிட எண்ணி உள்ள செல்ல முற்பட்டபோது  அவரின் சாதிய வேற்றிமையின் காரணமாக அவருக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னரே சாதி கொடுமையை எதிர்த்து  பெரிதும் போரிட்டார்.

இன்னும் ஒருவரின் கதை மீதமுள்ளது. இவரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மிகவும் பொருளாதார வசதி கொண்ட குடும்பத்தில் பிறந்து, சிறப்பு கல்விகளை மேற்கொண்டு, தன் தந்தை போலொரு வழக்கறிஞராக பணியாற்றி, அதிலொரு நிலையான புகழும் பெற்று, பாலகங்காதர திலக் அவரின் நாட்டு விடுதலை மற்றும் சுதேசி இயக்கங்களின் தாக்கங்களால் சுதந்திர வேள்வியில் தன்னை  தாண்டவமிட்டு, இறுதி காலம் வரை தாய் நாட்டின் விடுதலையை தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த தன்னலமற்ற தியாக செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை அவள்கள் மேற் கூறிய புகழ் மிக்க வசனதிற்க்கு விதி விலக்காய் வாழ்ந்தவர். ஆம் அவரின் வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வின்  பாதிப்போ அவரை பொது வாழ்க்கைக்கு அழைத்து வரவில்லை. தன் சுயசிந்தனை மற்றும் மனசாட்சி வழியே அவர்  தன் தாய்மண்ணுக்கும் தன் சுற்றத்தாருக்கும்  நடக்கும் அநீதிகளை கண்டு வெகுண்டு எழுந்தார். 

சுயநலமென்னும் விதையில் இருந்து வந்த விருச்சங்கள் போலல்லாமல் மண்ணில் விதைக்கப்படும் போதே அவர் பொது உடமையாக  விதைக்கப்பட்டார்.   
 மக்களுக்கு  துயரம் வரும் சமயங்களில் எல்லாம்  தன்னையே தியாகம் செய்தமையால் வரலாற்று பதிவுகளில் அதிகம் இல்லாமல் போக காரணமானார்.

வைரத்தை வைரத்தை கொண்டு தீட்டுவது போல வணிகம் செய்ய வந்த   ஆங்கிலேயர்களை அந்த வணிகம் மூலமே வீழ்த்த ஆயத்தமாகி கப்பலோட்டிய தமிழன் என்ற வான் கீர்த்தியும் பெற்றார்.

காரணமேயின்றி வரும் காதலே நிலைத்து இருக்கும் என்பது பொன்வாக்கு. ஐயா அவர்கள் மண் மீது வைத்த காதலும் அவ்வாறு  என்றும் நிலைத்த ஒன்று. தன் இறுதி நாட்களில் தன் நண்பராகிய பாரதியாரின் தேச விடுதலை பாட்டை கேட்டு கொண்டே அவரின் உயிர் பிரிந்தது.

இத்தகைய நெஞ்சுரம் கொண்டவரின் பிறந்தநாளான இன்று  (5 செப்டம்பர்) அவரின் தியாகத்தை மனதில் கொண்டு வணங்குகிறேன். 

வாழ்க! வ உ சி ஐயா அவர்களின் புகழ்.

Tuesday, June 25, 2019

வேள்பாரி அரசியல்

திடீரென அடைமழை பொழிய தொடங்கியது, நண்பர்கள் நான்கு பேரும் தங்கள் வண்டியை விட்டொரு தேனீர் கடையோரம் ஒதிங்கினர்.

ஆணி மாசத்திலிப்படி மழை வந்து பார்த்ததில்லையே , அடிக்கின்ற வெயிலுக்கு ரொம்ப தேவையான மழை
தானென்று புன்னகைத்து பேசினார் மகேஷ்.

இயற்கை பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது கொஞ்சம் தான்.வேள்பாரி பற்றி படித்துவருகிறேன் , இயற்கையின் பல ஆச்சரியமூட்டும் விடயங்களும் மனித குலங்கள் அவற்றை காக்க துடிக்கும் வீரத்தையும் மிக அருமையான புனைவு வழியாக இந்த தலைமுறைக்கு விட்டு  சென்றுள்ள அந்த எழுத்தாளரை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தன் கருத்துகளை முன்வைத்து தொடங்கினார் அன்புமணி.

வேள்பாரி என்றால் யார் , சுதந்திர போராட்ட தியாகியா என்று தனது ஆர்வத்தை அந்த கேள்வியிலே தெரியுமாறு கேட்டார் சாமிகண்ணு.

மகேஷ் முந்திக்கொண்டு "வேள்பாரி தெரியாதா!! நாம் சிறு வயதில் படித்திருப்போமே அந்த பாரி" என்றார்.

அன்புமணி தன் கைபேசியில் உள்ள அந்த புத்தகத்தின் புகைப்படத்தை நண்பர்களுக்கு காண்பித்தார்.

"வேள்பாரி" க்கு மேல் நோக்கு "ல்" தானே வரவேண்டும் ,இது என்ன புது மாதிரியாக கீழ் நோக்கு "ள்" பயன்படுத்தி உள்ளனர் என்று ஆர்வம் குறையாமல் சாமிகண்ணு வினவினார்.

அந்த சிற்றரசன் வேளிர் குலத்தை சேர்ந்தவன் ஆகையால் அவனது பெயரவனது குலத்தை கொண்டு இருக்கிறது. வேள்பாரின் கொடையின் ஈரம் ஒரு துளியேனும் இன்று இருப்பவர்களுக்கு இருந்திருந்தால் நம் தேசம் இதனை துயரங்களை சந்தித்திருக்காது என்று மேல்கூறினார் அன்புமணி.முல்லைக்கு தேர் ஈந்த அவன் வள்ளல் தன்மை கண்டு நான் உருகி விட்டேனென்று அடுக்கி கொண்டு சென்றார்.

சட்டென குறுக்கிட்ட ஸ்ரீனி முல்லைக்கு தேர் ஈவதுதெல்லாம் நம்பும் படியாக இல்லை. மேலும் நீங்களே இது ஒரு புனைவு கதை என்னும் போது இதை பெரிது படுத்திபேசி உணர்ச்சிவசப்படுவது உங்கள் பலவீனத்தையே காட்டுகிறது என்று எடுத்த கணமே இடியென முழங்கினார்.

சற்றும் எதிர்பாராத விதமாக ஸ்ரீனி குறுக்கிட்டது அன்புமணியை திகைக்க வைத்தது. ஏன் மறுக்கீறீர்கள் என்று வினவினார்.

ஒரு கொடிக்கு தேர் தரும் செயல் மிகவும் மிகைப்படுத்தியது போல இருக்கிறது, புலவர்கள் பரிசு பெற எதுவேண்டுமென்றாலும் பாடுவார்கள் . அதை எல்லாவற்றையும் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள  கூடாது என்று ஸ்ரீனி பதிலுரைத்தார் .

ஆமாம் கொஞ்சம் மிகை படுத்தியது போலவே எனக்கும் தோணுகின்றது என்று மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

நீங்கள் இயற்கையை  புறக்கணித்து வாழ்வதே உங்கள் எண்ணங்களுக்கான காரணமாகும் என்று அன்புமணி கணநேரத்தில் எதிர்த்தார்.

ஒரு கொடியின் வலியை உணர அதற்கு ஒரு கழி நட்டு உதவி செய்திருக்கலாமே அதை விடுத்து ஏன் ஒரு தேர் என்பதே எங்களின் பகுத்தறிவி என்று ஸ்ரீனி  வாதிட்டார் .

அன்புமணி சற்றும் தயங்காமல் உரத்த பேச ஆரம்பித்தார் , நீங்கள் உங்களின் சிந்தனை  அளவுகோட்டின் வழியே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அணுக முயலுகிறீர்கள் . உங்களை போன்ற மிதவாதிகள் என்றும் ஒரு இயற்கை நேசிப்பாளனின் அறிவை அறிய முடியாது .

ஸ்ரீனி நிதானம் தவறாமல் சொற்களை உதித்தார்  மிதவாதி எண்ணமல்ல , நடைமுறை சாத்தியம் பற்றி நான் வாதிக்கிறேன்

கோபமுண்ட அன்புமணி "இது நடந்துமுடிந்த சரித்திரம்  . அதை ஏற்க உங்கள் கண்கள் மறுக்கிறது " என்றார் .

தேநீரில் இருந்து வரும் அனலை விட இவர்கள் வார்த்தைகளின் இருந்து வரும் அனல் மற்ற இருவரின் உடலை சூடேறியது.

கொஞ்சம் எள்ளல் சிரிப்புடன் தன் பேச்சு திறனை ஆரம்பித்தார் ஸ்ரீனி . "சரித்திரம் !! அது எழுத்தாளின் சிந்தனை வழியே நம்மை கடத்தி செல்லவல்லது . நிறம் ,உருவம் , அடர்த்தி எல்லாம் படைப்பாளியின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கம் செய்யப்பட்டது. ஒரு சார்பாகவே அது படர்ந்து போகும் .

தலையை வேகமாக நிராகரிப்பு தோரணையில் அசைத்தார் அன்புமணி . "சிறுவயதில் பாடப்புத்தகத்தில் இதே கதை வரும் பொது ஏற்றுக்கொண்ட மனநிலை எப்பொழுது ஏற்க மறுக்க காரணம் , நாம் நம் வரலாற்றையும் தொன்மங்களையும் கடத்த தவிறிவிட்டோம் என்று என்னால் உணரமுடிகிறது "

வரலாறு மற்றும் தொன்மங்கள் போன்ற பழமை பேசி எத்தனை நாள் கழிக்க போகிறீர்கள் என்று கடுமையாக கேள்வி எழுப்பினார் ஸ்ரீனி .

ஆலமரம் செழித்து வளர்ந்தாலும் அது விதையில் இருந்துதான் வந்தது .அந்த விதையை பற்றி பேசுவதும் அதை காப்பதுமே பழமை என்பது உங்களுக்கு நினைவூட்டிக்கிறேன் என்றார் அன்புமணி.

இன்றைய நவீன அறிவியல் உலகத்தில் விதையை செயற்கையாக உற்பத்தி செய்யும் திறன் வந்துள்ளது ,ஆகையால் நீங்கள் கூறும் பழமை , கதைகள் எல்லாம் சிறந்த புனைவுகளே .நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்று கூற முயன்றார் ஸ்ரீனி.

மிதவாதிகளின் பிரச்சைனையே இது தான் என்று தன் உணர்வுகளை அன்புமணி மறுபடியும் கூறினார்.

மிதவாதிகளாய் இருப்பதில் தவறேதும் இல்லையே .எல்லா சேதிகளையும் நடுநிலையோடு எங்களால் மட்டுமே பார்க்க இயலும் .  வள்ளுவர் கூட நடுவுநிலை பற்றி பாடியுள்ளாரே அதை அறியாதவர் இல்லையே நீங்கள் என்று கேள்வி எழுப்பி மேலும் அன்புமணியை ஆவேசமாகினார்.

மூக்கு விடைக்க பேச ஆயுதமானர் அன்புமணி.   உண்மை பொய்மை , வெற்றி  தோல்வி  , வலது இடது, என்று இயற்கையின் விதியில் எல்லாம் இரு கூறுகளாகவே அமைந்துள்ளது . நீங்கள் உங்களுக்கு என்று ஒரு பக்கத்தையோ நிலைப்பாட்டையோ  அடையாளத்தையோ ஏற்க மறுக்கிறீர்கள். வலது இடது சாரிகள் என அனைவரையும் குறை கூறுவது தவிர உங்களுக்கு ஒரு தனி தன்மை இல்லை.கோழைகளின் அடையாளம் தான் இந்த நடுநிலை.

இரும்பு கூரை மீது பொழியும் மழையின் சத்தத்தை விட இவர்கள் இருவரின் வாதமும் இடைவிடாது திசை எங்கிலும் ஒலி எழுப்பி கொண்டேயிருந்தது.

கொள்கைகள் காலம்தோறும் மாறிக்கொண்டே போகும் அதற்கு வளைந்து கொடுத்து பயணிப்பது தான் நடுநிலை தன்மை . கொள்கையை இறுக பற்றிக்கொண்டு காலமாற்றங்களை அறியாமல் இருப்பது தான் அடையாள விரும்பிகளின் துயரம்.நிலைபாட்டோ, அடையாளமோ என்பது ஒரு சுமை போன்றது ,அதை கொண்டு உங்களால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்று நீங்கள் நம்புகீர்கள் என்று அவசர படாமல் பொறுமையாக சொற்களை வெளியிட்டார் ஸ்ரீனி.

மனதில் வலிமை உள்ளவரை என்று வேகம் குறையாமல் சூலூரைத்தார் அன்புமணி.

பேச்சியில் மட்டும் வலிமை போதாது . நடைமுறை சாத்தியம் பேசுங்கள் . மனித குலத்தை பிரிக்க உருவாக்கப்பட்டதே இந்த அடையாளங்களின் வேர் என்று ஆணித்தனமாக  ஸ்ரீனி எதிர் வாதம் புரிந்தார்.

இல்லை என்று அன்புமணி சொல்ல ஆரம்பிக்கும் முன்னே ஸ்ரீனி தனது கருத்துக்களை தொடர்ந்து கொண்டு இருந்தார். நீ ஒரு இந்து, நீ ஒரு சத்ரியன் , நீ ஒரு தமிழன் என்று அடையாளப்படுத்தும் போது நீ பொதுமேடையில் தனித்து வைக்க படுகிறாய் என்பதை எப்பொழுது உணரப்போகறீர்கள்.

மிகவும் தவறான புரிதல் , அடையாளம் என்பது ஒருமித்த எண்ணம் உடையோர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் கருத்துக்கு எதிர்த்து வரும் ஆபத்துகளில் இருந்து தங்களை காப்பதே ஆகும்.  மனிதன் சிந்திக்கும் திறம் கொண்டமையால் வந்த வினையே இந்த அடையாளங்கள். மனிதன் இருக்கும் வரை அடையாளம் இருக்கும். இயற்கை பேரழிவு காலங்களில் அடையாளங்கள் கடந்து உதவுவதே சிறந்த மனிதம் ஆகும்.

கடைசியில் நீங்கள் சொல்லும் அந்த பேரழிவு காலங்கள் நம் உலக  வாழ்க்கையில் எப்பொழுதோ ஆரம்பம் ஆகி விட்டது. அதை உணர்த்தத்தினாலே நான் நடுநிலையில் இருக்கிறேன்.

கனமழை நீரை உள்வாங்க முடியாமல் தவிக்கும் வாய்க்கால் போல இரு நண்பர்களின் கருத்துகளை உள்வாங்க முடியாமல் தவித்து கொண்டுயிருந்தார் சாமிகண்ணு.

தான் எழுப்பிய ஐய வினாவில் இருந்து தானே இந்த சொற்போர் ஆரம்பித்தது அதை எப்படி தடுத்து நிறுத்துவதென்று பதறி கொண்டு இருந்தார் மகேஷ்.

அன்புமணி எண்ண ஓட்டம் அதிகரித்து
கொண்டே போனது, நம்பிக்கை அற்றவர்கள் தான் வாழ்வின் கடைசி நிமிடத்தை  பற்றி பேசுவார்கள் . வாழ வேண்டும் என்பவர்கள் வழிகள் அமைப்பார்கள். விரல்களுக்குள் உள்ள வேறுபாட்டை உணர்த்த உங்களால் மனித வேறுபாட்டை ஏற்க மனம் இல்லை. நடுநிலை பேணும் நீங்கள் பிடிமானம் இல்லா சறுக்கு பாதையில் ஏற முயல்கீரிர்கள்.

உங்களை போன்று இடது அல்லது வலது சாரிகள் உணர்ச்சியின் வழியே அணுக முற்படுகின்றீர். கண்முடி தனமாக எல்லா விடயங்களையும் நம்ப குடியவர்கள். உண்மையை தேட சிறிதும் யோசிப்பதில்லை. நாங்கள் அறிவின் வழியே அனைத்தையும் நோக்குவதால் எங்களுக்கு உண்மை நிலை புரிகிறது. எப்பொருள் யார்யார் வாய் என்ற திருக்குறளை என் மனதில் பதித்தவன் நான் என்று சொல்லி முடித்தார் ஸ்ரீனி.

மாந்தற்கு அழகு மனதின் வழியே சிந்திப்பது , அறிவு சுயநலத்தை சுற்றியே பயணிப்பது. மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வேற்றுமை அறிவில் அல்ல மனதால் சிந்திப்பதில்லை. என்பும் உயிர் பிறருக்கு என முடியும் குறளை என் ஆழ்மனதில் புதைத்து உள்ளேன். அந்த விதையின் கிளைகளில் தான் நீங்கள் இப்பொழுது மோதி பார்த்து கொண்டு இருக்கிறீர்கள், வேரை காண இன்னும் என் ஆழம் பார்க்காதீர்கள், உங்களுக்கு அது நல்லது அல்ல என்ற எச்சரிக்கை ஓசை எழுப்பினார் அன்புமணி.

மழை சற்று அடங்க தொடங்கியதும். இவர்களின் பேச்சும் தடை உற்றது. தங்கள் வண்டிகளை எடுத்து வீடு சேர நண்பர்கள் நால்வரும் புறப்பட தயாராகினர். வீட்டுக்கு தாமதமாக சென்றால் இதை விட பெரிய சொற்போர் தங்களை தாக்கவிருக்கும் அதை உணர்ந்தே நண்பர்கள் விவாதத்தை ஒரு முடிவுக்கு வராமல் கிளம்பி சென்றனர்.

அப்பொழுது தேநீர் கோப்பையை எடுக்க தன் கைகளை நீட்டிய போது , கோப்பையின் மேல எறும்புகள் மேய கண்ட அன்புமணிக்கு பாரியின் நினைவு மின்னலென வெட்டியது..

கோப்பையை அங்கேயே ஒரு ஓரமாக கடைக்காரர் கண்களுக்கு தெரியாமல்  விட்டு சென்றார்.