Total Pageviews

103220

Wednesday, April 13, 2011

காணி நிலம் வேண்டும்!!!

தமிழனே!!!

மனசாட்சியை உன் மனதோடு போட்டு புதைத்தாய்

அதனால் அங்கு உன் உறவுகளை உயிரோடு புதைக்கிறான்..

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றான் நம் முன்னோர்

ஆனால் அவன் நாம் தமிழன் என்ற எண்ணம் வளர்க்க வேண்டும் என்பதை சொல்ல மறந்து விட்டான் போல்

அதனால் எலரும் தமிழனை மறந்து விட்டனரே...

உதவி நாடி என் கரத்தை நம்பினேன்

என் கை யை வைத்தே என் கண்ணை குத்தி விட்டனரே

நான் குறை சொல்லவேண்டியது என் கையை அல்ல என் சிந்தனையை

நான் என்னையே முழுதாக மாற்ற வேண்டும்...

கத்தி முனையை விட பேனாவின் முனை கூர்மை என்பார்கள்

ஆனால் எத்தனை கவிதை , சேதிகள் , கட்டுரைகள் எழுதினோம் என் இனம் காப்பாற்ற பட வேண்டும் என்று எல்லாமே தோல்வி தான் ஆனது

இன்னும் கூர்மை வேண்டுமோ!!! என் உறவினர்களை காப்பாற்ற...

ஓலமிட்டோம். கூச்சளிட்டோம் முடிந்த அளவு குரல் எழுப்பினூம்

இருந்தும் சிங்கத்தின் கர்ஜனையில் அது யார்க்கும் கேட்கவில்லை

சிங்களனே!!!!... உன்னை வீரன் என்பேன் . நீ சிறை பிடித்த  என் நண்பர்களை  அக்கணமே கொன்று இருந்தால்.

நீயோ அவர்களை சித்திரவதை கொடுமை செய்து கொன்றுளாய்...

அதனால் உன்னை கோழை என்பேன்..

உன் ஆண்மையை பாராட்டி இருப்பேன், குழந்தைகளையும் பெண்களையும் நீ விடுவித்து இருந்தால்

நீயோ பெண்களை நிர்வாண படுத்தி அழகு பார்த்தாய்..


நீ அங்கு சிதைத்து புதைத்தது உடல் அல்ல விதைகள்

முளைத்து கொண்டேதான் இருக்கும்...

எங்கள் மக்கள் எல்லோரும் ஒன்று சேரும் நாள் மிக விரைவில்...

அன்று...

ஸ்ரீ லங்கா , தீ லங்கா வாக மாறப்போகிறது...

ரத்தத்திற்கு ரத்தம் எங்கள் நோக்கம் அல்ல

பாரதி கேட்டது போல் "காணி நிலம் வேண்டும்"

அங்கு  சுதந்திர காற்று வீச வேண்டும் .......

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!!!!!

No comments:

Post a Comment