Total Pageviews

103219

Friday, March 3, 2017

தமிழ் போராட்டம்



தமிழ் நாட்டுல அண்மை காலமா மக்கள் ரோட்டுக்கு வந்து போராடறது வாடிக்கையா போச்சி . இது இல்லாம நிறைய பேர் வீடியோ ஆடியோ மீம்ஸ் னு அவங்க பங்குக்கு தங்களோட ஆதங்கத்தை கொட்டிட்டு இருக்காங்க . இதுக்கு முதல் காரணம் நாம்ம ஒரு சரியான தலைவன எடுக்க தவறானது தான். இதுபத்தி பேசின ரெண்டு நாள் ஆகும்.வேணாம் விட்டுடுவோம் . போராட்டம் பத்தி பேசுவோம்
போராட்டத்துக்கு ஒரு தனி மனிதன் தனக்குனு ஒரு வழிமுறை வச்சி இருப்பான். இல்ல அவன் எதிர்காம கூட போகலாம் , அது எனோ ஒரு வெறுப்பு உணர்ச்சினால கூட இருக்கலாம்.அதற்க்காக நாம அவனை குறை சொல்லறது நியமில்லை.உங்க நிலைப்பாட்டை தான் அனைவரும் கடைபிடிக்கனும்னு சொல்லறது சரியில்லை .அப்படி நம்ம வழியில நிக்காதவன நாம வெகு சுலபமா குறை சொல்லிடறோம் .அவன் இந்த கட்சியை சேர்ந்தவன் இல்ல காசு வாங்கிட்டேன், நீ எல்லாம் ஒரு தமிழனா போன்ற வசனங்கள் இதில் பிரபலம். உதாரணமா சல்லிக்கட்டு போராட்டத்துல ஆர் ஜே பாலாஜி கடைசி வரைக்கும் தொண்டை தண்ணி வத்த பேசினாரு.ஆனா நாம அவருக்கு வழங்கின பட்டம் துரோகி. அதுக்கு அப்புறம் அவரையே ரொம்ப யோசிக்க வச்சுப்புட்டோம் . அந்த துயரத்துல இருந்து அவர் மீண்டு வரத்துக்குள்ள அடுத்த போராட்டம்.இதுல அவர நாம பங்கு ஏற்க விடாம பார்த்துக்கிட்டோம்.நமக்குள்ள ஒரு பிரிவினை வாதம் நாமலே உருவாக்கிட்டோம் .இது மாதிரி எத்தனை ஆர் ஜே பாலாஜி பிரிக்கப்போறோம். ஒருவர் கருத்துக்கு மதிப்பு தந்து குறை சொல்லாம இருந்தாலே நமக்குள்ள இருக்க ஒற்றுமைக்கு எந்த பங்கமும் வராது . அந்த பழி சொல் இல்லனா இந்நேரம் ஆர் ஜே பாலாஜி போல நிறைய பேர் நம்மோடு நெடுவாசலில் போராடி கொண்டு இருப்பார்கள்.அவங்க துணை எங்களுக்கு தேவை இல்லனு உதாசீன படுத்திங்கனா கடைசியில மிஞ்ச போறது தேச ஒற்றுமையை சீர் குலைக்க வேண்டி இருக்கவங்க மட்டும் தான். இப்ப சொல்லுங்க தமிழ் நாட்டுல பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவது அரசா இல்ல பொது மக்கள் ஆகிய நாம் தானா ??
நமக்கு வேண்டியது தமிழர்க்கு எதிரான திட்டத்தை கைவிட வேண்டும் என்பது மட்டுமே . அதை விடுத்து அரசின் மீது சில பொய்யான அவதூறுகளை பரப்புவது போன்ற மலிவான அரசியல் இல்லை. ஏன் என்றால் நாம் இன்டர்நெட்ல whatsapp , facebook பழகி கொஞ்ச காலம் தான் ஆகுது . இதுனால ஏற்பட கூடிய நன்மைகள் எவ்ளோ இருக்கோ அது மாதிரி தீமையும் இருக்கு. முதல் செய்தி தந்தது நானா இருக்கணும்னு நினைக்கறது தான் பாதி மக்களின் எண்ணமா இருக்குது. நம்ம குழைந்தையை முதல் மதிப்பெண் எடுக்கணும்னு சொல்லறவங்க தான நாம்ம ,இதுல மட்டும் எப்படி நம்ம என்னத்த மாத்திக்க முடியும்?? இந்த மெசேஜ 10பேருக்கு அனுப்பினா உங்க வங்கி கணக்குல பணம் வரும் என்பதை நம்பி மத்தவங்களுக்கு மெசேஜ் அனுப்பற நிலை தான் நம்ம மக்களோட மனநிலையா இப்ப இருக்கு. இந்த மாதிரி அனுப்பறது நன்கு படித்து வேலையில் உள்ள நடுத்தர வயது உள்ளவர்களும் அடங்கும் . அப்ப நம்ம முந்தைய தலைமுறை, வீட்டுல இருக்க பெண்கள் நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாருங்க . இந்த பலவீனத்தை பயன்படுத்தி நம்முல் குழப்பம் ஏற்படுத்த வழி வகுக்க வேண்டாம் .ஆகவே இது போன்ற போராட்ட சமயங்களில் நாம் இன்னும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் அந்த whatsapp செய்திகளை கை ஆளவேண்டும். வந்த செய்தி உண்மையா பொய்யனு ஆராயதற்கு முன் நாம் மற்றவர்ளுக்கு அனுப்பி விடுகிறோம். நாம் விமர்சிப்பது ஒரு வித அமைதியற்ற நிலையை உருவாக்கி கொண்டு இருக்கிறது . ஒரு வித வெறுப்பு உணர்வை தூண்டி கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நமது லட்சியம் இது அல்ல. நாம் நமது சக்திகளை இது போன்ற ஆக்கபூர்வமற்ற செயல்களில் விரையம் செய்கிறோம். நாம் நம் மண்ணுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. சிதறி விட வேண்டாம் .
தேன் கூட்டை காக்கும் தேனீக்கள் போல் இப்பொழுது நம் தமிழ்நாட்டை காத்துகொண்டு இருக்கிறோம்.இதன் மீது கல் எறிபவர்கள் மிக அதிக எண்ணிகையில் உண்டு. அவர்களை கடிக்க வேண்டும் என்று ஆளுக்கு ஒரு திசையில் பறந்து பறந்து சென்று கொண்டு இருக்கிறோம் . முன்னே சொன்னது போல நம்மை ஒருங்கிணைக்க , வழி நடத்த தலைவன் இல்லை.ஆகையால் கூட்டாக ஒற்றுமையுடன் இருப்போம்.
நம் போராட்டம் உணர்வுபூர்வமாக இருக்கட்டும் .உணார்ச்சிவச படாம போராடுவோம்
https://www.facebook.com/sivakuru.manimozhi/posts/1835943950012831

No comments:

Post a Comment